search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makara Jyoti Darshan"

    • ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    • பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம்

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர ஜோதியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி பதினெட்டாம் படி திறக்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

    வருகிற 15-ந்தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    மகர ஜோதி காலத்தில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ×