search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maariamman Temple"

    • 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்.
    • மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கடந்த 6,7-ந் தேதிகளில் தேர் இழுக்–கப்–பட்டு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து தெப்பத்தேர், காமதேனு வாகனம், குதிரைவாகன உற்சவம் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • சாலை சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையில் அடையாளமாக விளங்கி வரும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் சிறப்பம்சமான தேரோட்டம் வரும் 13-ந்தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டத்துக்கென ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேரின் வெள்ளோட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. 5 நிலைகளை கொண்ட புதிய தேர் உடுமலை நகர வீதிகளில் உலா வரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்தநிலையில் தேரோடும் வீதிகளில் சாலைப்பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நகராட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சதாசிவம் வீதி, வடக்கு குட்டை வீதி, நெல்லுக்கடை வீதி உள்ளிட்ட தேரோடும் வீதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் அவற்றுக்கு கான்கிரீட் மூடி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொள்ளாச்சி சாலையில் சாலை நடுவில் மையத்தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களும் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் தேர்திருவிழாவில் தேரோட்டத்தை சிறப்பாக நடத்தும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

     உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.அதன்படி காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம்,ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம்,உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன்,உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன்,பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்களுக்கு உதவியாக தேரை இழுக்க பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி ரோடு,தளி ரோடு,சதாசிவம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.வழி நெடுக ஏராளமான பக்தர்கள் புதிய தேரை பார்ப்பதிலும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.போலீஸ் சூப்பிரண்டு கோபால கிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×