என் மலர்
நீங்கள் தேடியது "LSGvsRCB"
- பாதுகாப்பு காரணங்களுக்காக தரம்சாலா போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
- லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அரசிடம் இருந்து எந்த வழிகாட்டுதலும் கொடுக்கப்படவில்லை. எனவே, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் அளித்தனர்.
- 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
லக்னோ:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் அளித்தனர். விராட் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டூ பிளசிஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், பிரபுதேசாய் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.
15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. மழை நின்றதும் போட்டி தொடங்கியது. தொடர்ந்து ஆடிய டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, மகிபால் லாம்ரோர் 3 ரன், தினேஷ் கார்த்திக் 16 ரன், கரன் சர்மா 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.
லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், அமித் மித்ரா, நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது.
- 15.2 ஓவர்களில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
- லக்னோ அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். விராட் கோலி 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டூ பிளசிஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார்.
மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், பிரபுதேசாய் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். 15.2 ஓவர்களில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் துவங்கியது. டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட் ஆக இவரைத் தொடர்ந்து களமிறங்கிய லாம்ரோர் 3 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் தங்களது விக்கெட்டை பறிக்கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 126 ரன்களை எடுத்தது.

எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோ அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் பதோனி 4 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய க்ரூணல் பாண்ட்யா, தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டாயினஸ் முறையே 14, 1 மற்றும் 13 ரன்களை எடுத்து நடையை கட்டினர்.
நிக்கோலஸ் பூரான் 9 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், கிருஷ்ணப்பா கவுதம் 13 பந்துகளில் 23 ரன்களை குவித்த நிலையில், ரன் அவுட் ஆனார். இவருடன் ஆடிய ரவி பிஷ்னோய் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க லக்னோ அணி 16 ஓவர்களில் 79 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது தவித்தது. எனினும், அமித் மிஸ்ரா மற்றும் நவீன் உல் ஹக் ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. நவீன் உல் ஹக் 13 ரன்களில் அவுட் ஆக லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கடைசியில் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் அமித் மிஸ்ரா களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியின் கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் இரு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்காத நிலையில், மூன்றாவது பந்தை அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு விரட்டினார். இதைத் தொடர்ந்து 3 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ரன் ஏதும் கிடைக்காத நிலையில், ஐந்தாவது பந்தில் அமித் மிஸ்ரா அவுட் ஆக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






