என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "liquour"
- பாலாஜி,துரைப்பாண்டி ஆகியோர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
நெல்லை:
பாளை ரெட்டியார்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 38), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (26) மற்றும் துரைப்பாண்டி (24) ஆகிய இருவரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுந்தரராஜன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, துரைப்பாண்டி ஆகிய இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது.
- சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்..
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தில்லை கோவிந்தன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விற்பனைக்கு வைத்திருந்த 20 லிட்டர் சாராயமும் 300 லிட்டர் சாராய ஊரலையும் கைப்பற்றி அழித்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்