என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Land sale"
- நிலத்தை விற்பதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைதானார்.
- இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார்.
திருமங்கலம்
திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்த தியாகராஜன் மனைவி சரளாதேவி(48). இவர் திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் கல்லுப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமியிடம் 3.5 சென்ட் நிலத்தை சென்ட் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பேசி முடித்தார்.
இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை சரளாதேவி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை இடத்தை பதிவு செய்யவில்லை. இது குறித்து பொன்னு சாமியிடம் கேட்டபோது கூடுதலாக ரூ.4.5 லட்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சரளாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் முகமது சாபுரத்தை சேர்ந்தவர் சின்னான்(49). இவரது 2 மகன்கள் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
அவர்களுக்கு மின்வாரிய அலுவல கத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சத்தை திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த சின்னா(36). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ராஜா(55) ஆகிய இருவரிடமும் சின்னான் கொடுத்துள்ளார்.
ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இந்த நிலையில் இருவரும் போலியான அரசு ஆணை வழங்கி வேலை கிடைத்ததாக கூறியுள்ளனர். இது போலியான ஆணை என தெரிய வந்ததை தொடர்ந்து சின்னான் திருமங்கலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சின்னா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்