என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "land acquire"
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பெரியபாளையம்:
எண்ணூர் துறைமுகம் மகாபலிபுரத்தை இணைக்கும் 200 அடி சென்னை சுற்று வட்டச் சாலையை திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம், புன்னப்பாக்கம், அத்தங்கிகாவனூர், கிளாம்பாக்கம், அத்திவாக்கம் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள், விவசாயிகள், சங்க நிர்வாகிகள் சம்பத், கண்ணன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொது மக்கள் பேசும்போது, சாலை அமைக்கும் திட்டத்துக்காக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலத்தை கையகப்படுத்த உள்ள சர்வே எண் மற்றும் அளவை முன் கூட்டியே அதாவது போர்க்கால அடிப்படையில் தெரியப்படுத்த வேண்டும்.
இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட துறை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொது மக்கள், விவசாயிகள், அதிகாரிகள் என்று சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்