search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishaka"

    • சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சென்னி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேக 8-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பு யாக வேள்வி பூஜைகள், பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.

    இதை தொடர்ந்து பால், தயிர் உட்பட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜைகள் மூலவர், உற்சவருக்கு நடந்து. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள் பாலித்தனர்.

    பின்னர் உற்சவ–மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×