என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kumbabhisegam"
- கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
- நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் நடைபெற்றது.
உடன்குடி:
புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
மறுநாள் காலை புண்யாஹ வாசனம், ரஷாபந்தனம், யாகசாலப் பிரவேசம், முதல் கால ஹோமம், இரவு பூர்ணாகுதி சாற்றுமுறை, 31-ந் தேதி காலை சதுஸ்தான ஆராதனம், 3-ம் கால ஹோமம், காலை சீனிவாச பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி சாற்றுமுறை தீர்த்த ப்ரஸாத விநியோகம், மூலவர் உத்ஸவர் 81 கலச திருமஞ்சனம், சதுஸ்நான ஆராதனம், 4-ம் கால யாகசாலை ஹோமங்கள், தத்வநாஸ ஹோமம், உத்ஸவர் சயணாதிவாஸம், சாற்றுமுறை நடந்தது.
நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பபுறப்பாடு, காலை 5.20 மணிக்கு சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார், பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
மாலை 4.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7.30-க்கு கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் திருவீதி உலா, வாண வேடிக்கை நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்