search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovilpatto"

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு தொடக்க விழா பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் கதிரேசன், சண்முகசுந்தரம், காளிராஜ், மாரிமுத்து, முத்து மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்க வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்திகேயன் படித்துக் காண்பித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் ஜோதி காமாட்சி பேசினார். சங்கரேஸ்வரி, ஜெயக்கொடி, ராஜ ராஜேஸ்வரி பாண்டியன், சத்தியபாமா அசோக்குமார், பிச்சை மாரியம்மாள் தங்கராஜ், ஹேமலதா ஜெயக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதுநிலை குடிமை மருத்துவர் கமல வாசன், குழந்தைகள் நல மருத்துவர் பிரபு, கே. என். சுப்புராஜ் நினைவுக் கல்வியியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர் நடராஜன், லவ ராஜா, பாலமுருகன், பாண்டியன், முருகன் , சுடலைமுத்து, விக்னேஷ் என்டர்பிரைசஸ் அசோக், அருண் பேக்கரி மாடசாமி, காமாட்சி அம்மன் டிரேடிங் அசோக் மாறன், சண்முகவேல், தனபால், சக்திவேல், கருப்பசாமி, மாரிமுத்து, குமார், சக்தி மேட்ச் வொர்க் கிருஷ்ணமூர்த்தி, சேகர், கணபதி ,சூடாமணி, கண்ணன் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×