search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kothavalchavadi"

    கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். #Girlrescue

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களது 4 வயது மகள் ஜெயலட்சுமி.

    இந்த தம்பதி சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் செல்வி தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அங்கு சிறுமி ஜெயலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று ஜெயலட்சுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மகளை அப்பகுதியில் பல இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி ஜெயலட்சுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அப்பெண் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்ததும் அவளை ரெயில்வே போலீசார் மீட்டு தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. போலீசார் காப்பகத்துக்கு சென்று சிறுமியை அழைத்து வந்தனர்.

    சிறுமியை கடத்திய பெண் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அப்பெண்ணை பிடிக்க போலீசார் செங்குன்றத்துக்கு விரைந்துள்ளனர். சிறுமியை கடத்திய அவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. #Girlrescue

    கொத்தவால்சாவடியில் கொள்ளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொத்தவால்சாவடி, ஆறுமுகம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று மாலை அவர் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இது பற்றி கொத்தவால் சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்‌ஷன் கொள்ளையடித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து தர்‌ஷனை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் மீட்கப்பட்டது. கைதான தர்‌ஷன் மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை கொத்தவாசல்சாவடியில் 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    கொத்தவால்சாவடி, மணிகண்ட முதலி தெருவில் தனியாருக்கு சொந்தமான கார் நிறுத்தும் காலி இடம் உள்ளது.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்தவர்கள் கார்களை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் ஜெகதீஷ், மகாவீர் ஆகியோருக்கு சொந்தமான 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    எனினும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. கார்களில் தீப்பிடித்ததும் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட்டதால் அவை தப்பியது.

    நேற்று இரவு பட்டாசு வெடித்த போது ராக்கெட் வெடி விழுந்து கார்களில் தீப்பிடித்ததா? அல்லது நாசவேலை காரணமா? என்று கொத்தவால்சாவடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ×