search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerber"

    பீஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #ChinaOpen2018 #Kerber #Osaka
    பீஜிங்:

    மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் மகுடம் சூடும் வீராங்கனை ரூ.11 கோடியை பரிசாக அள்ளுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவின் வாங் குயாங், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மோதினார். இடதுகையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்டாபென்கோ தடுமாற, அதை சாதகமாக பயன்படுத்தி வாங் குயாங் அமர்க்களப்படுத்தினார். அவர் எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பான் இளம் புயல் நவோமி ஒசாகா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேனியலி கோலின்சை (அமெரிக்கா) 53 நிமிடங்களில் பந்தாடினார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் மூலம் ஒசாகா, சிங்கப்பூரில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 3-வது வீராங்கனையாக தகுதி பெற்றார். ஏற்கனவே சிமோனா ஹாலெப் (ருமேனியா), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் இந்த கவுரவமிக்க போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். 
    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான காலிறுதியில் கெர்பர், ஓஸ்டாபென்கோ வெற்றி பெற்றனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரவின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஒரு காலிறுதி ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் 14-ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்சினாவை எதிர்கொண்டார். இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 12-ம் நிலை வீராங்கனையான ஜெலினா ஓஸ்டாபென்கோ தரநிலைப் பெறாத டொமினிக்கா சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.


    ஓஸ்டாபென்கோ

    இதில் ஓஸ்டாபென்கோ 7-5, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் - ஓஸ்டாபென்கோ பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், கெர்பர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். #wimbledon2018
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    12-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எட்மன்டை (இங்கிலாந்து) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ரபெல் நடால் (ஸ்பெயின்), நிஷிகோரி (ஜப்பான்), டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 4-ம் நிலை வீரர் சுவரேவ் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    11-ம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-4, என்ற நேர் செட் கணக்கில் ஒசாகாவை (ஜப்பான்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். #wimbledon2018
    ×