search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Bandh"

    • பந்த் மற்றும் வன்முறை தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
    • போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு

    திருவனந்தபுரம்:

    இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் நேற்று இந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணி வரை நடந்தது.

    இதில் திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட பல மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களின் மீது கல்வீசினர். பல இடங்களில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும் கேரள அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

    இதையடுத்து கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கேரளா முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக 70 பஸ்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

    மேலும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் ரூ.45 லட்சம் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கோர்ட்டின் உத்தரவு மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

    இதற்கிடையே போராட்டத்தால் ஏற்பட்ட இழப்புகளை போராட்டக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கேரள போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்து உள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
    • நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    திருவனந்தபுரம்:

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், வன்முறையை தடுக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தலாம் என்றும் மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

    ×