என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kenya accident"

    • ஆற்றுபாலம் மீது பேருந்து சென்று போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டது.

    மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுபாலம் மீது அந்த பேருந்து சென்று போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெரு மாவட்ட ஆணையர் நோர்பர்ட் கொமோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

    கென்யாவில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரியும் மினி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் மினி பஸ்சில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். #KenyaAccident
    நைரோபி:

    கென்யாவின் கிசுமு பகுதியில் இருந்து நைரோபி நோக்கி எரிவாயு ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. கெரிசோ-நகுரு நெடுஞ்சாலையில் கப்மகா பகுதியில் வந்தபோது, பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் மினி பஸ் கடுமையாக சேதம் அடைந்து, இடிபாடுகளில் பயணிகள் சிக்கி உடல் நசுங்கியது.

    இந்த விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    விபத்து தொடர்பாக கெரிசோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #KenyaAccident
    ×