search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmir CM Mehbooba Mufti"

    காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற வந்த கூட்டணி அரசில் இருந்து பா.ஜ.க. இன்று விலகியதை தொடர்ந்து முதல் மந்திரி மெகபூபா முப்தி கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். #KashmirCMresigns #MehboobaMuftiresigns
    ஜம்மு:

    87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

    அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர்.

    முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.



    இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. இன்று அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என். வோராவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதற்கிடையே, அம்மாநில எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கவர்னரை சந்தித்தார். அதன் பின்னர், ஆட்சியமைக்க தேசிய மாநாட்டு கட்சி எந்த முயற்சியும் எடுக்காது என கூறினார். மேலும், கவர்னர் ஆட்சி அமல்படுத்த இருப்பதாக கவர்னர் கூறியதையும் உமர் அப்துல்லா தெரிவித்தார். #KashmirCMresigns #BJPDumpsPDP #MehboobaMuftiresigns

    ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். #Pakistanfiring #Mehbooba
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா உள்ளிட்ட எல்லைப்பகுதி காவல் சாவடிகளின்மீது  பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த எல்லை பாதுக்காப்பு படைவீரர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து ஒத்துழைக்க வேண்டும்.

    ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இருதரப்பு தாக்குதல்களை நிறுத்திகொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை இந்தியா முன்னெடுத்துள்ளது. ஆனால், ரம்ஜான் மாதத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பதைதான் இன்றைய தாக்குதல் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கனூர் கிராமத்தின்மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistanfiring #Mehbooba
    ×