search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kariapatti"

    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை விரைவில் சரி செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் காரியாபட்டி அருகேயுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை கடந்த 12 ஆண்டுகளாக செப்பனிடாமல் மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    இந்தச் சாலையை செப்பனிடக்கோரி மாவட்ட நிர்வாகம், நெடுஞ் சாலைத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அருகில் உள்ள இலுப்பையூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல முடியாமல் 17 கிலோமீட்டர் தூரம் உள்ள கமுதி சென்று தான் பள்ளி சென்று வருகின்றனர்.

    அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த சாலையில் வர மறுக்கின்றனர்.

    அப்படியே 108 ஆம்புலன்ஸ் வந்தாலும் இந்த சாலையில் செல்லும் போது நோயாளிகளுக்கு மேலும் உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.

    அவசர தேவைக்கு இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் கூறுகையில் எங்கள் ஊர் சாலை கடந்த 12 ஆண்டுகளாக பழுதடைந்த சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எங்கள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எங்கள் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விருதுநகர் சென்று எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #tamilnews
    காரியாபட்டி அருகே கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மாங்குளம். இங்குள்ள செண்பக மூர்த்தி கோவிலில் நாளை களரி திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த செண்பக மூர்த்தி, ராக்காயி அம்மன் உள்பட 7 சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் சிலைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சிலை உடைப்பு குறித்து ஆதியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கோவில் சிலைகளை சேதப்படுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆபிரகாம் லிங்கன், ராஜா மற்றும் 3 பேர் என்பது தெரியவந்தது.

    இவர்களில் ஆபிரகாம் லிங்கன் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆபிரகாம் லிங்கன் மீரட்டிலும், ராஜா நாக்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.

    கோவில் பூசாரியை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறி வந்த நிலையில் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். #Tamilnews
    ×