search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரியாபட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை- பொதுமக்கள் அவதி
    X

    காரியாபட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை- பொதுமக்கள் அவதி

    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 12 ஆண்டுகளாக சீரமைக்காத சாலையை விரைவில் சரி செய்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் காரியாபட்டி அருகேயுள்ள அம்மன்பட்டி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை கடந்த 12 ஆண்டுகளாக செப்பனிடாமல் மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    இந்தச் சாலையை செப்பனிடக்கோரி மாவட்ட நிர்வாகம், நெடுஞ் சாலைத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அருகில் உள்ள இலுப்பையூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல முடியாமல் 17 கிலோமீட்டர் தூரம் உள்ள கமுதி சென்று தான் பள்ளி சென்று வருகின்றனர்.

    அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் கூட இந்த சாலையில் வர மறுக்கின்றனர்.

    அப்படியே 108 ஆம்புலன்ஸ் வந்தாலும் இந்த சாலையில் செல்லும் போது நோயாளிகளுக்கு மேலும் உடல் நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.

    அவசர தேவைக்கு இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் கூறுகையில் எங்கள் ஊர் சாலை கடந்த 12 ஆண்டுகளாக பழுதடைந்த சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எங்கள் கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எங்கள் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து விருதுநகர் சென்று எங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தார். #tamilnews
    Next Story
    ×