search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kampan festival"

    • முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.
    • அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கம்பன் விழா  தொடங்கி வரை 3 நாட்கள் நடக்கிறது. 9 மணிக்கு முத்துக்கருப்பன் பார்வதி அறக்கட்டளை சிவதாசன் சார்பில் இளையோர் அரங்கம் நடந்தது. பழனி அடைக்கலம், சுகுமாறன் முன்னிலை வகித்தனர். இலக்கியச்சுடர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

     வியத்தகு தாய்மை என்ற தலைப்பில் மதன்குமார், மஸ்ருஸ்னவுப்ரா, யோகேஷ்குமார் பேசினார்.  10.15 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜே.வி.எஸ் நிறுவன அறக்கட்டளை சார்பில் குடும்பத்தினர் பரிசுகளை வழங்கினர்.

    தொடர்ந்து 10.45 மணிக்கு செவாலியே சச்சிதானந்தம் அறக் கட்டளை சார்பில் வழக்காடு மன்றம் நடந்தது. பேராசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். இலங்கை ஜெயராஜ் நடுவராக செயல்பட்டார். இலக்குவனின் சீற்றம் ஏற்புடையதன்று என்ற பொருளில் விஜயசுந்தரி வழக்கு தொடர்ந்தார். கவிதாஜவகர் வழக்கை மறுத்து பேசினார்.

    இன்று மாலை 5 மணிக்கு பட்டம்மாள் கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் முகுந்தன் சார்பில் கவியரங்கம் நடக்கிறது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றுகிறார். சரோஜா திருநாவுக்கரசு முன்னிலை வகிக்கிறார்.

    நெல்லை ஜெயந்தா தலைமை வகிக்கிறார். என்னை நன்றாக படைத்தனன் என்ற தலைப்பில் பிரசாந்த், தங்கம் மூர்த்தி, இனியன் ஆகியோர் கவி வாசிக்கின்றனர்.

    தொடர்ந்து 6.30 மணிக்கு சப்தகிரி சிவகொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

    அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் முன்னிலை வகிக்கிறார். பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக செயல்படுகிறார். சேர்ந்தவருள் சிறந்தவர் என்ற தலைப்பில் அறிவொளி, கோவிந்தராசு, வாசுதேவா, புதுக்கோட்டை பாரதி, சீனுவேணுகோபால், உமாசங்கர், இளங்கோ, சிதம்பரம், சரவண செல்வன் குகன், சுக்ரீவன், வீடணன் சார்பில் பேசுகின்றனர்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்
    • மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கழகம் சார்பில் 56-ம் ஆண்டு கம்பன் விழா தொடங்கி 14-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

     புதுவை கம்பன் கலையரங்கில் 12-ம் தேதி காலை 9.15 மணிக்கு தொடக்கவிழா நடக்கிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் தலைமையில் கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்புரை ஆற்றுகிறார்.

    கவர்னர் தமிழிசை கம்பன் விழாவை தொடங்கி வைக்கிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விழா மலர், புதுவை மாநில தமிழ் புலவர்களுக்கான பரிசுகளை வழங்குகிறார். கவிச்சக்கரவர்த்தியின் பணிவு என்ற பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூலை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட, புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் பெற்றுக் கொள்கிறார்.

     முருகேசன் பானுமதி அறக்கட்டளையின் கம்பக்காவலர் பரிசை இலங்கை விஷ்ணுதானுக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்குகிறார். அருணகிரி அறக்கட்ட ளையின் கம்பன் ஆய்வு நூல் பரிசை அலெக்சு தேவராசு சேன்மார்க்கிற்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வழங்குகிறார்.

    கம்பன் கழக போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் சந்திர பிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர்.

    கம்பன் கழக அறக்கட்டளை பரிசுகளை எம்.பி. வைத்தி லிங்கம் வழங்கு கிறார். எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, சென்னை கம்பன் கழக நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். மேலும் 14-ந் தேதி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

    முன்னதாக விழாவிற்கு வருபவர்களை கம்பன் கழக செயலாளரும் முன்னள் சபாநாயகருமான சிவக் கொழுந்து, செல்வகணபதி எம்.பி. மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தமிழ் அறிஞர்கள், கம்பன் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். 

    • கம்பராமாயணம் பற்றி ஓவிய கண்காட்சி நடந்தது
    • முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், சுகி சிவம், பர்வீன் சுல்தானா பங்கேற்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இரண்டு நாள் கம்பன் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருப்பத்தூரில் 44-வது கம்பன் விழா திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை தொடங்கியது. திருவையாறு இசைக் குழு வித்வான் ஞானம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. பள்ளி மாணவ மாணவிகளின் கம்பராமாயணம் பற்றி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து கல்வெட்டுகளில் நிழற்பட காட்சி நடைபெற்றது தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன் தலைமை வகித்தார் அனைவரையும் கே. எம். சுப்பிரமணியம் வரவேற்றார், கம்பன் கவியெல்லாம் நான் என்ற தலைப்பில் சென்னை பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.

    கம்பன் படைத்த காண்டங்கள் நூலை சீனி திருமால்முருகன் வெளியிட பேராசிரியர் மோகன்காந்தி அறிமுகம் செய்தார் காடும் நாடும் என்ற தலைப்பில், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேசினார், வழக்காடு மன்றம் நிகழ்ச்சியில் திருப்புமுனைகளில் சிறந்து விளங்குவது கைகேயையே என்பது பொருந்தாது என்ற தலைப்பில் நடுவராக சுகிசிவம் பங்கேற்று பேசினார், தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, ஓவி யப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக உலகம் யாவையும் தலைப்பில் எஸ்தர் ஜெகதீஸ்வரி பேசினார் தொடர்ந்து கவியரங்கம் நிகழ்ச்சியில், கலைமாமணி முத்தையா, கவிஞர் ஆத்தூர் சுந்தரம், கவிஞர் நா. சியாமளா, மு பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து உரை அரங்கம் நிகழ்ச்சியில் செந்தமிழில் ஒரு சுந்தர காண்டம் என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வம், பேசினார். நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் சிறந்தவர் என்று வெளிப்படுத்துபவர் என்ற தொடர் பட்டிமன்றத்தில் நடுவராக புலவர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை கம்பன் கழக தலைவர் எஸ்.எஸ்.மணியன் செயலாளர் தமிழ்ச்செம்மல்இரத்தின நடராஜன் உள்பட உறுப்பி னர்கள் செய்திருந்தனர்.

    • கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை ;

    புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் கம்பன் கழகம் சார்பில் 47-ம் ஆண்டு கம்பன் பெருவிழா இன்று (15-ந்தேதி) தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் விழாவில் 10 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கள இசையோடு தொடங்குகிறது. கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இதே போல் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உச்சநீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற நீதியரசர் சுரேஷ்குமார், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, கலைஇளமணி டாக்டர் மதுமிதா, முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான், பர்வின் சுல்தானா,

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திருநாவுகரசர், தொழிலதிபர் ரத்தினம், சொல்வேந்தர் சுகிசிவம், நடன இளமணி பாலாம்பிகா, மேனாள் சபாநாயகர் சிவக்கொழுந்து,

    முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், யுவஸ்ரீ கலா பாரதி சுஜிதா, நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்துராஜா, சின்னத்துரை, மேனாள் எம்எல்ஏ கவிதைபித்தன், கார்த்திக் தொண்டைமான், விஜயரவிபல்லவராயர், பாரதி விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார், இலக்கிய தென்றல் ரேவதி சுப்புலட்சுமி,

    தென்காசி முனைவர் ராமச்சந்திரன், சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரவிச்சந்திரன், கலைமாமணி முனைவர் ஞானசம்பந்தன் உட்பட பலர் தினந்தோறும் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி செம்மல் முத்துப்பட்டிணம் தொழிலதிபரும், கம்பன் கழக தலைவருமான ச.ராமசந்திரன், கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×