என் மலர்
நீங்கள் தேடியது "Kalpakkam nuclear power plant"
- தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது.
- ந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நாளை 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரபடுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சென்னை அணுமின் நிலையம் பாபா அனு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது அங்கு பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே அனுப்பபடுகிறது.

குறிப்பாக வெடிகுண்டு சோதனைக்காக வேன் மற்றும் பேருந்துகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லியோ, மேக்ஸ், எனும் இரண்டு மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து வரக்கூடிய வாகனங்களை மெட்டல் டிடெக்டர் சோதனை கருவி மூலம் சோதித்து அனுப்ப படுகிறது.
- கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது
- 16 ஆண்டுகளில் 570 பேர் பயிற்சி முடித்து அணுசக்தி துறைகளில் பணிசெய்து வருகின்றனர்.
கல்பாக்கம்:
தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடங்குளம் பகுதியில், அணுசக்தி துறைகளின் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இத்துறைகளில் அணுசக்தி தொழில்நுட்ப பணிகளுக்கான உயர்கல்வி பயிற்சி 2006-ம் ஆண்டில் இருந்து கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் பாபா அணு உலை ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்படுகிறது.
இதில் பொறியியல், இயந்திரவியல், ரசாயன பொறியியல், விண்கலன் தொழில்நுட்பம், எரிபொருள் சுழற்சி, பூமியின் தட்பவெப்ப அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஒரு வருடம் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப் பிரிவுகளில் 16 ஆண்டுகளில் இதுவரை 570 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் அணுசக்தி துறைகளில் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 16-ம் ஆண்டில் பயிற்சி முடித்த 20 பேருக்கு பதக்கத்துடன் பட்டமளிக்கப்பட்டது
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அங்கேயே பணிபுரிந்து பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






