என் மலர்
நீங்கள் தேடியது "Kailasanathar Temple"
விழுப்புரத்தில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
விழுப்புரத்தில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு:
சிவபெருமானை தரிசித்து அவரிடம் அர்ச்சனை செய்த மலர் ஒன்றைக் கையில் ஏந்தியபடி வந்தார், துர்வாச முனிவர். அப்போது எதிரே ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து வந்த இந்திரனைக் கண்டார். தன்னிடம் இருந்த மலரை, இந்திரனுக்கு வழங்கினார் முனிவர். யானை மேலிருந்த இந்திரன், அங்குசத்தினால் அம்மலரை வாங்கி, யானையின் தலைப்பகுதியில் வைத்தான். மறு நொடியே யானை தன் தலையில் இருந்த மலரை கீழே தள்ளி, காலால் மிதித்தது.
இதனைக் கண்டு கோபமுற்ற துர்வாச முனிவர், ‘சிவபெருமானின் மலரை அவமதித்ததால், உன் செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகட்டும்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தால், தன்னுடைய சக்தியையும், செல்வங்களையும் இழந்த இந்திரன், அசுரர்களுடன் போரிட வேண்டிய நிலைக்கு விதி வசத்தால் இழுத்துச் செல்லப்பட்டான்.
இதையடுத்து திருமாலிடம் சரணடைந்த இந்திரன், சாப விமோசனம் வேண்டி நின்றான். பாற்கடலில் தோன்றும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாபம் நீங்கும் என அறிவுறுத்தினார், திருமால். அதன்படி, அசுரர்களின் துணை கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது நஞ்சு வெளிப்பட்டது.
அந்த ஆலகால விஷத்திற்கு அஞ்சிய தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். எம்பெருமான் நஞ்சை உண்டார். அது அவரது உடலுக்குள் செல்லாமல் இருக்க, அன்னை பார்வதி ஈசனின் கழுத்தைப் பிடித்தாள். இதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கிவிட்டது. அவரது கழுத்து நீல நிறமாக மாறிது. இதனால் சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.
நஞ்சை உண்ட பிறகு இத்தலம் வந்து மவுனமாக வீற்றிருந்தார். அனைவரும் நீலகண்டரை வழிபட்டனர். துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில், ஏழரை நாழிகை எனும் சாம நேரத்தில் சிவபெருமான் அருள் செய்தார் என தலபுராணம் கூறுகிறது.
ஆலய அமைப்பு :
இத்தல இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய், வட்டவடிவ ஆவுடையாரில் காட்சியளிக் கிறார். விஜயநகர மன்னர்கள் காலத்திய நந்தி மண்டபம், மகா மண்டபம், இதன் தென்புறம் அரிதான வடக்கு பார்த்த முருகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகா மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்தது. அர்த்த மண்டபம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலுக்குரிய சிற்பங்களில் பழமையானது, பிட்சாடனர் சிலையாகும். இது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கலை வேலைப்பாடுகள் கலந்த நிலையில் கோவில் அமைந்துள்ளது.
அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி எனும் பெரியநாயகி. இவரது சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அன்னை மேற்கு நோக்கி, மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தல மரம் வில்வமாகும். தல தீர்த்தம் எதுவும் இல்லை.

கயிலாசநாதர், பெரியநாயகி
இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் வசந்த உற்சவம் நடக்கிறது. இது தவிர நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
திருமணம் வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவிப்பார்கள். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதன்மூலம் திருமணத்தடை நீங்கி, விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இறைவனை தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தொன்மைச் சிறப்பு :
இன்றைய விழுப்புரம், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊராகும். பல்லவர் காலத்தில், நிருபதுங்கவர்மன் பெயரால் ‘விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கி சதுர்வேதி மங்கலம்’ எனவும், முதலாம் ராஜராஜன் காலத்தில் ‘ஜனநாத சதுர்வேதி மங்கலம்’ எனவும் வழங்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்தில் விழுப்பரையன் என்பவன் பெயரால், ‘விழுப்பரையபுரம்’ என விளங்கியது. கி.பி. 1265-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலேயே இது ‘விழுப்புரம்’ என வழங்கப்பட்டிருக்கிறது. வைகுந்தவாசப்பெருமாள் ஆலய கொடிக் கம்பத்தில், விழுப்புரம் எனும் ஜனகாபுரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையான பின்னணி கொண்ட விழுப்புரத்தில், சோழமன்னர் முதலாம் ராஜராஜன் காலத்திற்கு முன்பே கயிலாசநாதர் திருக்கோவில் அமைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். முதலாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், ராஜநாராயண சம்புவராயன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், விருப்பண்ண உடையார், சாளுவ நரசிங்கராஜ உடையார், நரசிங்க நாயகர், கிருஷ்ண தேவராயர் அச்சுததேவ மகாராயர், சதாசிவ தேவராயர், இரண்டாம் ஸ்ரீரங்கதேவர் முதலான மன்னர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணி நடந்துள்ளதை அறியமுடிகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாலயம், விஜயநகர மன்னன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அமைவிடம் :
விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும், புகழ்மிக்க ஆஞ்சநேயர் கோவிலின் வெகு அருகிலும் இந்த ஆலயம் இருக்கிறது. விழுப்புரத்தில் வைகுந்தப் பெருமாள், வாலீஸ்வரர் ஆகிய பழம்பெரும் கோவில்களும், புகழ்பெற்ற ஆஞ்சநேயர், வீரவாழியம்மன் கோவிலும் அமைந்துள்ளன. பழமையான சத்திரங்களும் உள்ளன.
தல வரலாறு:
சிவபெருமானை தரிசித்து அவரிடம் அர்ச்சனை செய்த மலர் ஒன்றைக் கையில் ஏந்தியபடி வந்தார், துர்வாச முனிவர். அப்போது எதிரே ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து வந்த இந்திரனைக் கண்டார். தன்னிடம் இருந்த மலரை, இந்திரனுக்கு வழங்கினார் முனிவர். யானை மேலிருந்த இந்திரன், அங்குசத்தினால் அம்மலரை வாங்கி, யானையின் தலைப்பகுதியில் வைத்தான். மறு நொடியே யானை தன் தலையில் இருந்த மலரை கீழே தள்ளி, காலால் மிதித்தது.
இதனைக் கண்டு கோபமுற்ற துர்வாச முனிவர், ‘சிவபெருமானின் மலரை அவமதித்ததால், உன் செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகட்டும்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தால், தன்னுடைய சக்தியையும், செல்வங்களையும் இழந்த இந்திரன், அசுரர்களுடன் போரிட வேண்டிய நிலைக்கு விதி வசத்தால் இழுத்துச் செல்லப்பட்டான்.
இதையடுத்து திருமாலிடம் சரணடைந்த இந்திரன், சாப விமோசனம் வேண்டி நின்றான். பாற்கடலில் தோன்றும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாபம் நீங்கும் என அறிவுறுத்தினார், திருமால். அதன்படி, அசுரர்களின் துணை கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது நஞ்சு வெளிப்பட்டது.
அந்த ஆலகால விஷத்திற்கு அஞ்சிய தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். எம்பெருமான் நஞ்சை உண்டார். அது அவரது உடலுக்குள் செல்லாமல் இருக்க, அன்னை பார்வதி ஈசனின் கழுத்தைப் பிடித்தாள். இதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கிவிட்டது. அவரது கழுத்து நீல நிறமாக மாறிது. இதனால் சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.
நஞ்சை உண்ட பிறகு இத்தலம் வந்து மவுனமாக வீற்றிருந்தார். அனைவரும் நீலகண்டரை வழிபட்டனர். துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில், ஏழரை நாழிகை எனும் சாம நேரத்தில் சிவபெருமான் அருள் செய்தார் என தலபுராணம் கூறுகிறது.
ஆலய அமைப்பு :
இத்தல இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய், வட்டவடிவ ஆவுடையாரில் காட்சியளிக் கிறார். விஜயநகர மன்னர்கள் காலத்திய நந்தி மண்டபம், மகா மண்டபம், இதன் தென்புறம் அரிதான வடக்கு பார்த்த முருகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகா மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்தது. அர்த்த மண்டபம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலுக்குரிய சிற்பங்களில் பழமையானது, பிட்சாடனர் சிலையாகும். இது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கலை வேலைப்பாடுகள் கலந்த நிலையில் கோவில் அமைந்துள்ளது.
அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி எனும் பெரியநாயகி. இவரது சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அன்னை மேற்கு நோக்கி, மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தல மரம் வில்வமாகும். தல தீர்த்தம் எதுவும் இல்லை.

கயிலாசநாதர், பெரியநாயகி
இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் வசந்த உற்சவம் நடக்கிறது. இது தவிர நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
திருமணம் வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவிப்பார்கள். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதன்மூலம் திருமணத்தடை நீங்கி, விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இறைவனை தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தொன்மைச் சிறப்பு :
இன்றைய விழுப்புரம், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊராகும். பல்லவர் காலத்தில், நிருபதுங்கவர்மன் பெயரால் ‘விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கி சதுர்வேதி மங்கலம்’ எனவும், முதலாம் ராஜராஜன் காலத்தில் ‘ஜனநாத சதுர்வேதி மங்கலம்’ எனவும் வழங்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்தில் விழுப்பரையன் என்பவன் பெயரால், ‘விழுப்பரையபுரம்’ என விளங்கியது. கி.பி. 1265-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலேயே இது ‘விழுப்புரம்’ என வழங்கப்பட்டிருக்கிறது. வைகுந்தவாசப்பெருமாள் ஆலய கொடிக் கம்பத்தில், விழுப்புரம் எனும் ஜனகாபுரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையான பின்னணி கொண்ட விழுப்புரத்தில், சோழமன்னர் முதலாம் ராஜராஜன் காலத்திற்கு முன்பே கயிலாசநாதர் திருக்கோவில் அமைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். முதலாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், ராஜநாராயண சம்புவராயன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், விருப்பண்ண உடையார், சாளுவ நரசிங்கராஜ உடையார், நரசிங்க நாயகர், கிருஷ்ண தேவராயர் அச்சுததேவ மகாராயர், சதாசிவ தேவராயர், இரண்டாம் ஸ்ரீரங்கதேவர் முதலான மன்னர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணி நடந்துள்ளதை அறியமுடிகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாலயம், விஜயநகர மன்னன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அமைவிடம் :
விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும், புகழ்மிக்க ஆஞ்சநேயர் கோவிலின் வெகு அருகிலும் இந்த ஆலயம் இருக்கிறது. விழுப்புரத்தில் வைகுந்தப் பெருமாள், வாலீஸ்வரர் ஆகிய பழம்பெரும் கோவில்களும், புகழ்பெற்ற ஆஞ்சநேயர், வீரவாழியம்மன் கோவிலும் அமைந்துள்ளன. பழமையான சத்திரங்களும் உள்ளன.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.
தென்பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன், மிகச் சிறந்த சிவ பக்தன். அவன் ஒருமுறை தம் படைகளோடு நகரை வலம் வந்தான். அப்போது மாலை வேளை நெருங்கியது. தினமும் சாயரட்சையில் பூஜைசெய்து சிவனை வழிபடும் வழக்கமுள்ள ஸ்ரீவல்லபன், வழிபாட்டுக்காக தாமிருந்த பகுதியில் ஆலயம் ஏதாவது உள்ளதா? என்று தேடினான்.
நீருக்குள் நீலகண்டன் :
ஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.
அரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.
ஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.
ஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :
காலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.
அப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.

ஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்
ஆலய அமைப்பு :
சிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.
வேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.
இரட்டை பைரவர் :
நவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.
இந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பெயர்க் காரணம் :
தம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.
12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம் :
திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.
நீருக்குள் நீலகண்டன் :
ஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.
அரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.
ஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.
ஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :
காலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.
அப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.

ஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்
ஆலய அமைப்பு :
சிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.
வேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோருக்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.
இரட்டை பைரவர் :
நவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
தொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.
இந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பெயர்க் காரணம் :
தம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.
12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம் :
திருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.






