search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabadi tournment"

    • 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநிலம் தழுவிய கபடி போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பாக திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகள் கலந்து கொள்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழுவினரால் போட்டி நடத்தி, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை வழியனுப்பும் விழா நடந்தது. விழவுக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெய்சித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கன்னிமார் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பா.ஜனதா விளையாட்டுத்துறை செயலாளர் கே.பி.மகேஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் சின்னு, செல்வராஜ், பயிற்சியாளர் ராஜூ, தம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம்.
    • இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் இளையோர் பொறுக்குத்தேர்வு (செலக்ஷன் டிரையல்ஸ்) வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்ட கபடிக்கழக அலுவலக மைதானத்தில் நடக்கிறது.

    இதில் பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட கபடிக்கழகத்தில் பதிவு பெற்ற அணியின் வீரர்கள் கலந்து கொள்ளலாம். மாவட்ட ஜூனியர் அணிக்கு தே்ாவுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி முகாம்நடத்தி வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில இளையோர் 'சாம்பியன்ஷிப்' போட்டிக்கு மாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் அழைத்துச்செல்லப்படுவார்கள். இதில் தேர்வாக வயது வரம்பு சிறுவர் 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பின்போ பிறந்திருக்க வேண்டும். 70 கிலோ எடை இருக்க வேண்டும். வயது சான்றிதழாக ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட், இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக (அசல்) கொண்டு வரவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் குடியிருக்கும் சிறுவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் தகுதியுடைய சிறுவர்களுக்கு ஆறுதல் பரிசு ரூ.200 வழங்கப்படும். மதியம் உணவும் வழங்கப்படும்.

    தே்ாவுப்போட்டி 6-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலையில் முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×