என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Junior Lawyer"
- சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையில் தனக்கு பதில் ஆஜராக ஜூனியர் ஒருவரை வக்கீல் அனுப்பினார்.
- இதனால் அந்த வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.
வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வக்கீலை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதனால் சம்பந்தப்பட்ட வக்கீல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். நேரில் வராததற்கு மன்னிப்பும் கோரினார்.
அப்போது அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த வக்கீலுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
