search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jujube fruit"

    காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று விடலாம்.
    அசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாகி விட்டது. மூன்று வேலை முதல் ஆறு வேளை வரை கூட அன்றாடம் அசைவ உணவினை மட்டுமே உண்பவர்கள் ஏராளம். காய்கறி, பழ உணவுகளை கண்ணால் காண்பதனைக் கூட மிகப் பெரிய தவறாக இவர்கள் கருதுவார்கள். இத்தகையோரிடம் காய்கறி உணவினை வலியுறுத்துவது கடினமான செயல் ஆகி விடுகின்றது. காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று விடலாம்.

    * தாவர வகை உணவினை உட் கொள்வதன் மூலம் நீர்சத்து குறைபாடால் ஏற்படும் தலைவலி குறையும்.

    * மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி பாதிப்பு குறையும்.

    * ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராய் இருக்கும். சர்க்கரை நோய் பாதிப்பின் அபாயம் 18 சதவீதம் குறையும்.

    * தாவர வகை உணவு புற்று நோய் தவிர்ப்பிற்கான சிறந்த முறையாகும்.

    * கல்லீரல் பாதிப்பிற்குச் சிறந்தது.

    * தாவர வகை உணவில் கிடைக்கும் வைட்டமின்கள், தாது உப்புகளால் ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.

    * ஆஸ்துமா பாதிப்பு உடையவர்கள் தாவர வகை உணவினை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா பாதிப்பு வெகுவாய் குறையும்.

    * வயிற்றுப் புண், உப்பிசம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் பிரட்டல் ஆகியவை உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் பயனடைவர்.

    * மனச் சோர்வு, அழுத்தம் உடையவர்களுக்கு தாவர வகை உணவே பரிந்துரைக்கப்படுகின்றது.

    * உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் தாவர வகை உணவின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க முடியும்.

    * இதிலுள்ள நார்சத்து மலச்சிக்கலை நீக்கும்.

    * தாவர வகை உணவில் உப்பு குறைவாகவே உபயோகிக்கப் படுவதால் உடலில் அதிக உப்பு சேர்வதும் தடுக்கப்படுகின்றது.

    சிலருக்கு திடீரென கை விரல்களில் வீக்கம் போன்ற உப்பிசம் இருக்கும். பொதுவில் உடலில் அதிக உப்பு இருந்தாலும் இப்படி ஏற்படும். அதிக சூடும் இவ்வாறு வீக்கத்தினை ஏற்படுத்தும் என ஆயுர் வேதத்தில் குறிப்பிடுகின்றனர்.

    ஆயினும் சில முக்கியமான மருத்துவ காரணங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.

    * மூட்டு வலி, வீக்கம் இவை விரல்களில் வீக்கத்தினை ஏற்படுத்தலாம்.

    * அதிக நீர் தேக்கம் சில காரணங்களால் உடலில் ஏற்படும் பொழுதும் விரல்களில் வீக்கம் ஏற்படலாம்.

    * சில ரத்த கொதிப்பு மருந்துகள், சர்க்கரை நோய் மருந்துகள், கருத்தடை மருந்துகள் போன்றவை விரல்களில் உப்பிசம் ஏற்படுத்தலாம்.

    * சிறுநீரக கோளாறுகள் விரல்களில் வீக்கத்தினை கை, கால் விரல்கள், கணுக்கால் இவற்றினை பாதிக்கும் நோய்.

    கை விரல்களின் வீக்கத்திற்கு பல முக்கிய மருத்துவ காரணங்கள் இருப்பதால் வீக்கம் தெரிந்தவுடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள்.
    இலந்த பழம்... இலந்த பழம்.. செக்க செவந்த பழம்.. தேனாட்டம் இனிக்கும் பழம்.. என்ற பாடலை மறக்க முடியாது. தற்போது இலந்தை பழம் சீசன் என்பதால் இன்றும் கிராமங்களின் வயல்வெளி, ஏரிக்கரை ஓரத்தில் உள்ள இலந்தை மரங்களில் சிறுவர்கள் பழம் பொறுக்கி உண்கின்றனர். அதிக ஊட்டசத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது.

    இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதி இருக்கும் இது மிகவும் சுவை மிகுந்தது. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது.

    இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. பழத்தில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கம் வரும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது. பஸ்சில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிட்டால் தடுக்கப்படுவதுடன் உடல் வலி நீங்கும்.

    பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது. நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் விலை குறைவு என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள்.

    உமா, கள்ளக்குறிச்சி.
    ×