search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Johan pandian"

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து 20 பஸ்கள் உடைக்கப்பட்டது.
    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வீடு பாளை மனகாவலம் பிள்ளை நகரில் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஜான்பாண்டியன் வீட்டு மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினர்.

    இதனை கண்டித்து ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி உடைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஜான் பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பாளை உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மானூர் பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (27), மாவடியை சேர்ந்த பன்னீர் முருகன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். நேற்று இரவு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளரான கண்ணபிரான் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு கண்ண பிரானின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாளை, தச்சநல்லூர், ராமையன்பட்டி பகுதியில் கண்ணபிரான் ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் மாநகர பகுதியில் மட்டும் 9 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நெல்லை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    இதுபோல இன்று அதிகாலையிலும் அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

    ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களான நடுவக்குறிச்சி செல்லபாண்டி, சுள்ளான், படுகையூர் பாஸ்கர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை, பாளை பகுதியில் கூடுதல் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம் என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். #johnpandian #thoothukudiplant

    ஈரோடு:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த ஜான் பாண்டியன் அங்கு எஸ்.பி.சக்திகணேசனை சந்தித்து பேசினார்.

    அப்போது தனது ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் சிறப்பாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்த எஸ்.பி.க்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 15-ந்தேதி தஞ்சையில் மாநில மாநாடு நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஈரோடு மாவட்டத்திலும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    பசுமை வழிசாலை திட்டத்தை ஒருபுறம் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபுறம் அரசும் அதை அமைத்து தீர்வோம் என போராடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை (உண்மை நிலை)யை வெளியிட வேண்டும். காவிரி பிரச்சினையில் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் உச்சநீதி மன்றம் இனியும் மவுனம் காட்டக் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை பற்றி நான் முன்னமே தமிழக முதல்வரை சந்தித்து அதை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினேன். இப்போது மூடப்பட்டுள்ளது.

    மீண்டும் ஆலையை இயக்க நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.  #johnpandian #thoothukudiplant

    ×