search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JeyaRam"

    • திரைத்துறையின் ஆளுமையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா.
    • சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    1980-ல் நடிகரும், இயக்குனருமான வினுசக்கரவர்த்தி இயக்கிய 'வண்டிச்சக்கரம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்திலேயே உச்சத்தை தொட்ட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டிற்காக ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் வரிசையில் நின்றனர்.


    சில்க் ஸ்மிதா கவர்ச்சி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார். பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற படங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பாதி வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா தான் என்கிற அளவிற்கு ஆளுமை செலுத்தினார். அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி போஸ்டர்

    'சில்க் ஸ்மிதா -தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எஸ்.பி. விஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


    • மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழில் முறை மாமன், தென்னாலி, நைனா, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த ஜெயராம்
    தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த ஜெயராம்

    இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய்சேதுபதி, பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #VijaySethupathi
    தமிழில் முன்னணி நாயகனாக விளங்குபவர் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

    ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒகேனக்கலில் சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.



    இந்நிலையில், தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் மர்கோனி மத்தாய் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் சேதுபதி. ‘பீட்சா’, ‘சூது கவ்வும்‘, ‘விக்ரம் வேதா’, ‘96’ உள்ளிட்ட விஜய் சேதுபதி நடித்த பல படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×