

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம், தமிழில் முறை மாமன், தென்னாலி, நைனா, துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.