என் மலர்
நீங்கள் தேடியது "jewels were stolen"
- இரவு வீட்டை பூட்டி விட்டு மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.
- வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சரவணம்பட்டி,
கோவை கணபதி அடுத்த காந்திமா நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(62). இவரது மனைவி ரஞ்சனா(46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இன்று அதிகாலை மகேந்திரன் வீடு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பகத்தினர் உடனடியாக இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகையும் மாயமாகி இருந்தது. இவர்கள் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பதிவுகளை கைப்பற்றினர்.
மேலும் வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மதுரை சித்திரை திருவிழா- கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 பேரிடம் நகை பறிக்கப்பட்டது.
- பக்தர்களிடம் நகை பறித்த திருட்டு கும்பலை சேர்ந்த வர்களை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரையில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை காண்பதற்காக 4-ந்தேதி இரவு முதலே பக்தர்கள் வைகையாற்று பகுதியில் குவிந்தனர். லட்சக்கணக் கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் அதனை பயன்படுத்தி சில இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தேனி மாவட்டம் அல்லி நகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது60). அவர் மதிச்சியம் ஷா தியேட்டர் அருகே நின்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கசங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.
மதுரை விக்கிரமங்கலம் கோவில்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (57). இவர் குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வந்திருந்தார். திருவிழா கூட்டத்தில் அவர் அணிந்தி ருந்த 3 பவுன் தங்க சங்கி லியை மர்மநபர் பறித்துச் சென்று விட்டான்.
மதுரை மதிச்சியம் சப்பானி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதவள்ளி (60). இவர் வைகை வடகரை பகுதியில் திருவிழா கூட்டத்தில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.
மதுரை சின்ன சொக்கி குளம் ஜவஹர்ரோட்டை சேர்ந்த வர் மங்கம்மாள்(72). இவர் வைகையாற்றுக்கு சென்றி ருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மங்கம்மாள் அணிந்திருந்த 6பவுன் சங்கிலியை மர்ம நபர் திருடிவிட்டான்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அழவாக்கரை வாடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (67). இவர் வைகையாற்றில் பக்தர்கள் கூட்டத்தில் நின்ற போது அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று விட்டான்.
ராமநாதபுரம் புத்தேந்தலை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பூபதி (32). இவர் சித்திரை திருவிழா கூட்டத்தில் பக்தர்களோடு பக்தர்களாக சாமி கும்பிட்ட போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டான்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வர்கள் மதிச்சியம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்திரை திருவிழா கூட்டத்தில் பக்தர்களிடம் நகை பறித்த திருட்டு கும்பலை சேர்ந்த வர்களை தேடி வருகின்றனர்.






