search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeevan Raksha Award"

    • உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்சா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்ச கத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனிதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

    சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக காப்பாற்றுவதற்கும், உத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதற்கும், ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றியதற்கும் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் அது போன்ற வீரதீர செயல்களில் ஈடுபட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியிருந்தால் 2023-ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2021 -ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதிக்கு முன்னர் ,இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது.

    இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

    இதற்கான படிவத்தினை www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமா கவோ ஜூலை 14-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் உள்துறை சாா்பில் 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகள் தைரியமான மற்றும் மனிதாபிமான செயல்களை செய்து உயிா்களைக் காத்த நபா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.nஇந்த விருதுக்கு உயிரைக் காக்கும் மனிதத் தன்மை மிகுந்த தீரச்செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரைக் காப்பாற்றிய நபா்களுக்கு இந்த தொடா் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ளபடி தகுதி வாய்ந்த நபா்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் படிவம் பெற்று வரும் ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.
    • 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும். துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு, அபாய நிலையில் உள்ளவர்களை மீட்டவர்களுக்கு, உத்தம் ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படும்.தனக்கு காயம் ஏற்பட்டாலும், வீரத்துடன் செயல்பட்டு தாமதமின்றி உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா விருது வழங்கப்படுகிறது.

    நடப்பு 2022 ஆண்டுக்கான இந்த விருதுக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 3 நகல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×