search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "is magic"

    • வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்க ன்கோ ட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்க டேஷ். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வெங்கடேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காயத்திரி குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.

    வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவி ல்லை.

    இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×