search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inspector transferred"

    மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி. அலுவலகம் முன் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர், அதிகாரிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
    மாமல்லபுரம்:

    நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.

    பார் நடத்தியதில் கோடிக்கணக்கான பணத்தை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். மேலும் போலீசார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் நெல்லையப்பனுக்கு 60 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்கள் கொடுத்த பணத்தை கேட்டு அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று முன்தினம், அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் புகார் மனுவை போலீசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பின்னர் லஞ்ச பணம் 50 ஆயிரத்தை வீசிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி நெல்லையப்பன் தீவைத்துக்கொண்டார். தீயில் கருகிய அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக முகநூலில், எந்தெந்த போலீசார் மாதா, மாதம் லஞ்சம் வாங்கி தன் வாழ்க்கையை சீரழித்து தற்கொலை முடிவிற்கு தள்ளினர் என்ற விவரத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் பார் உரிமையாளர் தற்கொலை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் சம்பவம் நடந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு நேற்று வந்து விசாரணை நடத்தினார். அப்போது நெல்லையப்பன் 3 தண்ணீர் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்துள்ளார். அதில் ஒரு கேனில் உள்ள பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளது தெரிய வந்தது. அதுகுறித்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

    மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    மேலும் தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தற்கொலை வழக்கில் நெல்லையப்பன் குற்றம் சாட்டிய திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற காவல் துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர் குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அனுமதி இன்றி இயங்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் நடத்தி வந்த தையூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த 6 டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யாவு ‘சீல்’ வைத்தார்.

    இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு உடலை கொண்டு சென்றனர். 
    உ.பி. போலீஸ் நிலையத்தில் மூதாட்டியை காலில் விழவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டார். #Inspectortransferred

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ போலீஸ் நிலையம் நாட்டிலேயே  3-வது சிறந்த போலீஸ் நிலையமாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கால் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அங்கு நடந்த ஒரு சம்பவம் அந்த போலீஸ் நிலையத்தை தலைகுனிய வைத்துள்ளது.

    இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தேஜ் பிரகாஷ் சிங் சினிமா கதாநாயகன் போல் கால்மேல் கால் போட்டும், தலையில் கையை வைத்துக்கொண்டும் ஆணவத்துடன் அமர்ந்து இருக்கிறார்.

    அவரிடம் 75 வயதான பிரம்மா தேவி ஓடிவந்து தொழிற்சாலையில் வேலை பார்த்த தனது பேரன் இறந்து விட்டது பற்றி விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் போடும் படி கெஞ்சுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டரோ கொஞ்சம் கூட மூதாட்டியை மதிக்காமல் பேசுகிறார்.

    இதனால் மூதாட்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்பிட்டும், காலைத்தொட்டு வணங்கியும் கெஞ்சுகிறார். அப்போதும் இன்ஸ்பெக்டர் சட்டை செய்யாமல் அமர்ந்து இருக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து உத்தரபிரதேச அரசு அந்த இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து ஆயுதப் படைக்கு மாற்றியது.

    உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் தொழிற்சாலை மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. இன்ஸ்பெக்டரின் செயல் குறித்து விசாரணை  நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Inspectortransferred

    எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


    ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    வாலிபர் ஜெயக்குமார் இறந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டு ஆனந்தன்  நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். உயிரிழந்த வாலிபரின் பெற்றோரிடமும், எஸ்பிளனேடு போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்.   #EsplanadePoliceStation 
    சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் குணசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



    ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். #EsplanadePoliceStation
    ×