search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injuredகும்பகோணம் விபத்து"

    கும்பகோணம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
    கும்பகோணம்:

    நாச்சியார்கோவிலில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அரவிந்தன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதே மோட்டார் சைக்கிளில் பின்னால் ஆகாஷ், கவுசல்யா ஆகியோர் அமர்ந்து சென்றனர்.

    கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல அரவிந்தன் முயன்றார்.

    அப்போது எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் படுகாயமடைந்து பலியானார்.

    ஆகாஷ், கவுசல்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியானவர் எந்த ஊர்? உடன் வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    சிங்கம்புணரியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கிழக்காட்டு ரோடு ஆர்.ஆர்.டி. நகர் பகுதியில் வசிப்பவர் பொன்னுத்தாய் (வயது50). இவர் குடும்பத்தினருடன் திருப்பத்தூர் அருகே வைரன்பட்டில் உள்ள சாய்பாபா கோவிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். முதல்வாகனத்தில் பொன்னுத்தாயின் மகள் திருமலைக்குமாரி, உறவினர் விஜி (33) மற்றும் 2 குழந்தைகள் சென்றனர். விஜி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மற்றொரு வாகனத்தில் பேச்சியப்பன், பொன்னுத்தாய் ஆகியோர் சென்றனர்.

    திருப்பத்தூர் சாலையில் சிவபுரிபட்டி வகுத்துப்பிள்ளையார் கோவில் அருகே செல்கையில் திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விஜி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இதில் அதில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அதிர்ச்சியில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொன்னுத்தாய் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு விஜி மற்றும் அவருடைய குழந்தைகள் ஜனனி மற்றும் பிரியதர்சினி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமலைக்குமாரி மற்றும் பொன்னுத்தாய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே திருமலைக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×