search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "india v england"

    மனைவி இல்லாமல் சதம் அடித்ததை எப்படி உணர்கிறீர்கள்? என தினேஷ் கார்த்திக் கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.

    இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கு என்பதால், இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகவே நின்றது.

    ஆனால், ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெயரையும் பெற்றார். 

    போட்டி முடிந்த பின்னர், இந்திய வீரர் தினேஷ் கார்திக், ரோகித் சர்மாவிடம் விளையாட்டாக பேட்டி எடுத்தார். அப்போது, 3 சதம் மற்றும் தொடரை வென்றது எப்படி இருக்கிறது? என்று தினேஷ் கார்திக் கேட்டார். 

    அதற்கு பதிலளித்த ரோகித் ஷர்மா, ‘தொடரை வென்றது மகிழச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் அணியுடன் இணைந்து எப்படி விளையாடி வெற்றியை பெறலாம் என்பதே எண்ணமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சிறப்பாக ஆடவேண்டும் என்று என்பதை விட அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்கலாம் என்றே விளையாடினேன்’ என்றார்.

    ‘உங்களது மனைவி மைதானத்தில் இருந்திருந்தால் சிறப்பாக பேட்டிங் செய்வீர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், மனைவி இல்லாமல் நீங்கள் இம்முறை சதம் அடித்துள்ளீகள் எப்படி உணர்கிறீர்கள்’ என தினேஷ் கார்த்திக் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ‘கண்டிப்பாக எனது மனைவி இந்த ஆட்டத்தை டிவியில் பார்த்திருப்பார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வருவார். எனது சதத்தின் போது அவர் இங்கு இல்லாமல் போய்விட்டது. அது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் ரிதிகா இங்கு இருப்பார்’ என கூறினார்.
    ×