என் மலர்
நீங்கள் தேடியது "Indepedence day"
- சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
- டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
டெல்லியில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும். விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
டெல்லி செங்கோட்டையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அலங்காரமும் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் 5,000 பேர் நாடு முழுவதிலும் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர்டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், வெப்பக் காற்று பலூன்கள் உள்ளிட்டவை பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையவழி அச்சுறுத்தல், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடகங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- இந்தியாவின் சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.
- இந்த சுதந்திர தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சுதந்திர அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சுதந்திர தினமான உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆகஸ்டு 15-ம் தேதி அன்று சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாகக் கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது.
இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர்.
இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.






