என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Incident of violence"
- சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் நூற்றுக்கணக் கானோர்சேர்த்து குழுக்க ள்அமைத்து கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது. மேலும் கலவரம் ஏற்பட காரண மாக இருந்ததோடு மட்டு மல்லாமல் கலவரத்தில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராயபாளையம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் தினேஷ்ராஜ் (வயது 19) மற்றும் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.
- கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13- ந் தேதி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மூணாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 17- ந் தேதி பள்ளிக்கு முன்பு திரண்ட போரா ட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்து, அலுவலகங்கள், தளவாடப் பொருட்கள், மாணவர்கள் சான்றிதழ்கள் ஆகியவை தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நடந்த வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிரச்சனையை சரியாக கையாளாத கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்