என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது
    X

    சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது

    • சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் நூற்றுக்கணக் கானோர்சேர்த்து குழுக்க ள்அமைத்து கலவரம் செய்ய தூண்டும் வகை யில் கருத்துக்களை பதிவு செய்தது. மேலும் கலவரம் ஏற்பட காரண மாக இருந்ததோடு மட்டு மல்லாமல் கலவரத்தில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராயபாளையம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் மகன் தினேஷ்ராஜ் (வயது 19) மற்றும் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாதேஷ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×