search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imprison"

    • இரு மாணவி–களையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
    • இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று மாலை திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சில் ஏறி வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் செல்ல பயணச்சீட்டு கேட்டுள்ளனர்.

    அப்போது கண்டக்டர் இளநகரில் பஸ் நிற்காது என கூறி அந்த இரு மாணவிகளையும் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவிகள் இளநகரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளநகர் பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்கள் இனி இளநகரில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    ×