search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immaculate Diwali"

    • கலெக்டர் வேண்டுகோள்
    • சுற்றுசூழல் மாசடைவதால் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தாண்டு வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் உள்ள மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளியை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டா டுவார்கள். பட்டாசு களை வெடிப்ப தினால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளும் மாசடை கிறது. பொது மக்கள் பட்டாசு வெடிப்ப தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதன்படி, அரசு சார்பில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

    தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலமாக முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிலும், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி திருநாளை விபத்து, ஒலி, மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தீபாவளி பண்டிகையை யொட்டி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசடைகிறது. மேலும் பட்டாசு ஒலி, மாசு காரணமாக குழந்தைகள், பெரியவர், நோய் பாதித்தோர் பெரும் பாதிப்புக்கும் ஆளாக நேரிடுகிறது.

    எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தவிர குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம்.

    அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குடிசை பகுதி, எளிதில் தீப்பற்றும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×