search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்
    X

    மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

    • கலெக்டர் வேண்டுகோள்
    • சுற்றுசூழல் மாசடைவதால் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தாண்டு வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் உள்ள மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளியை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டா டுவார்கள். பட்டாசு களை வெடிப்ப தினால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளும் மாசடை கிறது. பொது மக்கள் பட்டாசு வெடிப்ப தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதன்படி, அரசு சார்பில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

    தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலமாக முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிலும், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×