search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iftar program"

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
    • ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.

    தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

    வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.

    தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.

    அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.

    பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மதுரை காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி காஜிமார் தெருவில் உள்ள ஹஸ்ரத் தாஜுதீன் மஹாலில் நடந்தது.

    மாவட்ட துணைத் தலைவர் ரசூல் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, போனி பேஸ், அபுதாகிர், அப்பாஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கோ.சந்திரசேகர் வரவேற்றார்.

    இதில் முதன்மை குரு கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் மதுரை அருட்தந்தை ஜெரோம், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மதுரை மாவட்ட முஸ்லீம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தையர் பெனடிக் பர்ண பாஸ், லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பகுதி குழு செயலாளர் ஜீவா.

    கவுன்சிலர்கள் நூர்ஜகான், ஜென்னியம்மாள், பானு முபாரக் மந்திரி, சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் ஜான்சன், ஐ.என்.டி.ஜே. மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் பேசினர்.

    • ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கோரிப்பாளையம்-கான்சாபுரம் மெயின்ரோடு ரம்ஜான் மினி மகாலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் முகமது அலி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைத்தலைவர் லூர்து முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் லாரன்ஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ. பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அலாவுதீன், அருட்தந்தை பெனடிக் பர்ணபாஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, வடக்கு மண்டல தலைவர் சரவணா புவனே சுவரி, முகேஷ்.

    கவுன்சிலர் உமா ரவி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி, பொருளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனி பேஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மண்டல பொறுப்பாளர் அவ்தா காதர், தி.மு.க. வட்டச்செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் இனிய அரசன் ஆகியோர் பேசினர்.

    மாவட்டக்குழு உறுப்பினர் சாகுல் அமீது நன்றி கூறினார்.

    ×