search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband attacked"

    சிங்காரப்பேட்டை அருகே மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவரை வெட்டிகொலை செய்த கணவனின் வெறிச்செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்து உள்ள கேட்டநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது50) விவசாயியான இவரது மனைவி காமாட்சி (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காமாட்சிக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரவி தனது மனைவியிடம் கேட்டு அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    நேற்று கணவன் - மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி நேற்று இரவு தனது மனைவியை கொடுவாளால் வெட்டி கொலை செய்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து காமாட்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவியை கொலை செய்து விட்டு சிங்காரப் பேட்டை போலீசில் ரவி சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம் எனது மனைவி காமாட்சி வேறு ஒருவருடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்தேன் என கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனே சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதலில் ஈடுபட்டதால் கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி மாங்கல்யத்தை பறித்த கணவரின் செயல் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் சமயன் குடிகாட்டை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வளர்மதி பழனிவேல் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். வளர்மதியும், அவரது மகனும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று வளர்மதியுடன் தகராறு செய்து அவரது கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மாங்கல்யத்தை பறித்ததுடன், அவர் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் இழுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி வளர்மதி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×