search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Humsafar Express"

    • ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.
    • புறப்பட்ட சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

    திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து தீ வெளியேறுவதை பார்த்ததும், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலா தெரிவித்து உள்ளார்.

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட ஏழைகள் ரதம் ரெயில் நவீன வசதிகளுடைய ஹம்சேபர் எக்ஸ்பிரசாக மாற்றப்படுவதால் வரும் 29-ந்தேதி முதல் ரெயில் கட்டணம் உயருகிறது. #IndianRailways
    சென்னை:

    வசதி இல்லாதவர்களும் குளு-குளு ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு “ஏழைகள் ரதம்” எனும் கரீப்ரத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 26 ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுக்க - முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டதாகும். அனைத்துப் பெட்டிகளிலும் 3 அடுக்கு படுக்கை வசதி உள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுவாக சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏ.சி. வசதி பெட்டிகளில் ரூ.2050 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.1380 கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

    என்றாலும் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏ.சி. ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி குறைவு காரணமாக ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தேர்வு செய்வதில்லை.

    இதனால் சென்னையில் இருந்து புறப்படும் ஏழைகள் ரதம் ரெயில் விஜயவாடாவுக்கு பிறகு முன்பதிவு செய்யாதவர்களும் ஏறி தூங்கும் நிலைக்கு மாறுகிறது. இதன் காரணமாக அந்த ரெயிலில் இடிப்பு அதிகரித்தப்படி உள்ளது. எனவே அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மாற்ற ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    அதன்படி டெல்லி- சென்னை ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் திரும்பப் பெறப்பட உள்ளது. அதற்கு பதில் ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாற்றம் வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

    ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளும் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்டதாகும். ஆனால் ஏழைகள் ரதம் ரெயிலை விட இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிக அளவில் நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.இ.டி. திரை இருக்கும். அதில் பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். சொகுசு மெத்தை படுக்கை, ஏ.டி.எம். எந்திரம், பயோ-டாய்லட், அதிநவீன பாதுகாப்பு வசதிகள், பருத்தி துணி விரிப்புகள், தனிமை வசதி, சி.சி.டி.வி. காமிரா கண்காணிப்பு ஆகியவையும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் உண்டு.

    இதன் காரணமாக இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் கட்டணமும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் குறைந்தபட்ச கட்டணமே ரூ.2200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-டெல்லி வழித்தடத்தில் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவது போல வடக்கு மண்டலத்திலும் ஏழைகள் ரதம் ரெயில்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். #IndianRailways #HumsafarExpress #GaribRathExpress
    ×