search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honda Jazz EV"

    ஹோன்டா நிறுவனத்தின் ஹாஸ் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Honda #Jazz



    ஹோன்டா ஃபிட் இ.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. ஃபிட் இ.வி. கார் ஹோன்டா ஜாஸ் பேட்ஜ் கொண்டிருக்கிறது. டெல்லியில் புதிய ஜாஸ் இ.வி. கார் சோதனை செய்யப்படுவதாக நியூஸ்18 வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் ஃபிட் ஹேட்ச்பேக் இரண்டாம் தலைமுறை மாடலை தழுவி ஃபிட் இ.வி. உருவாகியிருக்கிறது. ஃபிட் இ.வி. கார் மாடல் தான் இந்தியாவில் ஜாஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. காரின் முன்பக்கம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 15 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான ஸ்பாயிலர் காரின் பின்புற கிளாஸ் வரை நீள்கிறது. ஹோன்டா ஃபிட் இ.வி. மாடலில் MCF3 எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 331-வோல்ட், 20கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: News18

    எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்யும் போது 225 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஃபிட் இ.வி. மாடலில் வழக்கமான சார்ஜிங் போர்ட் வலதுபுறமாகவும், ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதற்கான போர்ட் இடதுபுறத்தில் வழங்கப்படுகிறது.

    வழக்கமான சார்ஜிங் போர்ட் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரம் ஆகும், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தும் போது பேட்டரியை 20 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடும். இந்தியாவில் வெளியிட முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் காரை ஹோன்டா உருவாக்கி வருகிறது.

    எனினும், இந்த கார் பி-பிரிவில் வெளியாகும் என்றும் இது ஜாஸ் மாடலை சார்ந்திருக்காது என கூறப்படுகிறது. இதேபோன்று 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய விலை குறைந்த எலெக்ட்ரிக் வாகனத்தை ஹோன்டா உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஹோன்டா கார்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் எலெக்ட்ரிக் வேரியன்ட் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா கார்ஸ் நிறுவனத்தின் ஜாஸ் எலெக்ட்ரிக் வேரியன்ட் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் வேரியன்ட் 2020-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் ஜாஸ் மாடல் முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தைகளில் 2020-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹோன்டா ஜாஸ் எலெக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பானாசோனிக் மற்றும் ஜிஎஸ் யுவாசா நிறுவனங்கள் தயாரிக்கும் பேட்டரிகளை ஹோன்டா பயன்படுத்துகிறது. இரு நிறுவனங்கள் தயாரிக்கும் பேட்டரிகள் ஆம்ப்ரெக்ஸ் தொழில்நுட்பம் சார்ந்து உருவாக்கப்படுகிறது.


    புதிய எலெக்ட்ரிக் மாடல் தற்போதைய ஜாஸ் போன்று காட்சியளிக்குமா அல்லது புதிய வடிவமைப்பை கொண்டிருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் ஹோன்டா நிறுவனம் HR-V எஸ்யுவி சார்ந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது. பீஜிங் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்யுவி எலெக்ட்ரிக் மாடல் இந்த ஆண்டு சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

    தற்சமயம் ஹோன்டா நிறுவனத்தின் ஒரு எலெக்ட்ரிக் மாடல் மட்டுமே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்காவில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் 25.5kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது 129 பிஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.

    சீனாவில் ஹோன்டா எலெக்ட்ரிக் கார் விலை 24,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.16.36 லட்சம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 ஹோன்டா ஜாஸ் எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனையாகும் என ஹோன்டா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
    ×