search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy traffic in kodaikanal"

    • ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    கோத்தகிரி

    கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நீலகிரி மாவ ட்டத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை யை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காட்டேரி வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது

    இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோத்தகிரி மார்க்கமாக மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    நேற்று மாலை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.

    • வார இறுதி நாட்களில் கொடைக்கானல் ஸ்தம்பிக்கும் அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்

    கொடைக்கானல் :

    கொடைக்கானலில் இரண்டு மாதமாக கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் குளு குளு சூழலை அனுபவிக்க அதிக அளவில் குவிந்தனர். வார இறுதி நாட்களில் கொடைக்கானல் ஸ்தம்பிக்கும் அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை ரசிக்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் சூழலில் நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சாலைகளில் பல கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரே நாளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் 5 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் சுற்றுலா பயணிகள் குறித்த நேரத்தில் சுற்றுலா இடங்களை கண்டுகளிக்க முடியாமல் திணறினர்.அவ்வப்போது பலத்த மழை பெய்த நிலையில் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.கடும் வாகன நெரிசலால் முழுமையாக எந்த ஒரு சுற்றுலா தளத்தையும் கண்டு ரசிக்க முடியவில்லை என சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.

    மாலையிலும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்ற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். எனவே கொடைக்கானலில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதோடு நெரிசல் ஏற்படும் சமயங்களில் அதனை ஒழுங்குபடுத்த தற்காலிக காவலர்களை நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×