search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Awareness"

    • முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் குருகாட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். முகாமில் தூத்துக்குடி மண்டல கால்நடை இணை இயக்குனர் சஞ்சீவி ராயன், திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் செல்வகுமார், ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவை அறக்கட்டளை சார்பில் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு நடத்தினர்.

    பேரூராட்சி தலைவர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி போலீஸ் குடியிருப்பில் திடக்கழிவு மற்றும் மக்கும் கழிவு மக்காத கழிவு ஆகிய குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் (பொறுப்பு) செயல் அலுவலர் சண்முகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள், வார்டு கவுன்சிலர் சின்னன், மஸ்தூர் யூனியன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி போடப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி நாசுவம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.

    கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு)டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் 92 கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி,20 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி,191கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் போடப்பட்டது.

    மேலும் 26 கால்நடைகளுக்கு மருத்துவ உதவி,5 ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம், 10 செயற்கை முறை கருவூட்டல்,15 கருவுற்றல் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.இதில் கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள்.
    • இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையும், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும் இணைந்து மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் உமன்ஸ் செல் பெண்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார். 

    சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவ னத்தின் தமிழ்(இயற்க்கை) மருத்துவ ஆய்விருக்கையின் பொறுப்பாளரும், தி சுசான்லி குழுமத்தின் இணை சேர்மனும் பேராசிரியை டாக்டர் உஷாரவி மற்றும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சிறுதானியங்கள் குறித்த மருத்துவ பயன்கள், கருப்பைக்கு பலன் தரும் சிறுதானியங்கள், ஞாபக சக்தி, தோல் பாதுகாப்பு, முடி பாதுகாப்பு, போன்றவற்றி ற்கான சிறுதானியங்கள் குறித்து டாக்டர் ரவி பேசினார்.

    பேராசிரியை டாக்டர் உஷாராணி சிறு, குறு உடல் உபாதைகளுக்கு மிகச்சரியான இயற்கை மருத்துவ முறைகளையும் மருந்து, மாத்திரையின்றி அக்குபிரஷர் மூலமாக தீர்வளிக்கும் அக்குபிரஷர் புள்ளிகளை கற்றுக்கொடுத்தார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு டாக்டர் கல்பலதா சால்வை அணிவித்தார். ஹெர்பல் கேர் நிறுவனத்தின் பேராசிரியர் சக்திவேல் கே.என்.சி. கல்லூரியின் டாக்டர்கள் அமுதவல்லி, ஸ்ரீதேவி, சுமதி, மற்றும் காதாம்பரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக பயன் பெற்றனர்.

    • எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.
    • பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஏர்வாடி:

    கிராமம் முழு சுகாதாரமாக இருத்தல் வேண்டும் என்பதனை வலியுறுத்தி தளவாய்புரம் பஞ்சாயத்தில் பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வீட்டிற்கு வீடு நவீன கழிவறை அமைத்தல், தெருக்களை சுத்தமாக பேணி பாதுகாத்தல், சாக்கடைகளை தூர் வாருதல், அனைத்து இருப்பிட பகுதிகளையும் தூய்மை படுத்துதல் போன்ற நிலைகளை வலியுறுத்தி எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின், சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×