என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Awareness"

    • மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள்.
    • இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையும், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும் இணைந்து மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் உமன்ஸ் செல் பெண்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார். 

    சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவ னத்தின் தமிழ்(இயற்க்கை) மருத்துவ ஆய்விருக்கையின் பொறுப்பாளரும், தி சுசான்லி குழுமத்தின் இணை சேர்மனும் பேராசிரியை டாக்டர் உஷாரவி மற்றும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சிறுதானியங்கள் குறித்த மருத்துவ பயன்கள், கருப்பைக்கு பலன் தரும் சிறுதானியங்கள், ஞாபக சக்தி, தோல் பாதுகாப்பு, முடி பாதுகாப்பு, போன்றவற்றி ற்கான சிறுதானியங்கள் குறித்து டாக்டர் ரவி பேசினார்.

    பேராசிரியை டாக்டர் உஷாராணி சிறு, குறு உடல் உபாதைகளுக்கு மிகச்சரியான இயற்கை மருத்துவ முறைகளையும் மருந்து, மாத்திரையின்றி அக்குபிரஷர் மூலமாக தீர்வளிக்கும் அக்குபிரஷர் புள்ளிகளை கற்றுக்கொடுத்தார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு டாக்டர் கல்பலதா சால்வை அணிவித்தார். ஹெர்பல் கேர் நிறுவனத்தின் பேராசிரியர் சக்திவேல் கே.என்.சி. கல்லூரியின் டாக்டர்கள் அமுதவல்லி, ஸ்ரீதேவி, சுமதி, மற்றும் காதாம்பரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக பயன் பெற்றனர்.

    • எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.
    • பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார்.

    ஏர்வாடி:

    கிராமம் முழு சுகாதாரமாக இருத்தல் வேண்டும் என்பதனை வலியுறுத்தி தளவாய்புரம் பஞ்சாயத்தில் பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வீட்டிற்கு வீடு நவீன கழிவறை அமைத்தல், தெருக்களை சுத்தமாக பேணி பாதுகாத்தல், சாக்கடைகளை தூர் வாருதல், அனைத்து இருப்பிட பகுதிகளையும் தூய்மை படுத்துதல் போன்ற நிலைகளை வலியுறுத்தி எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின், சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×