search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு முகாம்
    X

    தி சுசான்லி அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

    ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு முகாம்

    • மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள்.
    • இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையும், கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும் இணைந்து மாணவிகளுக்கு உடல் நலன் காக்கும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஆரோக்கிய முகாம் நடத்தினார்கள். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் உமன்ஸ் செல் பெண்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பொறுப்பு முதல்வர் டாக்டர் ஷபினா பானு தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவ னத்தின் தமிழ்(இயற்க்கை) மருத்துவ ஆய்விருக்கையின் பொறுப்பாளரும், தி சுசான்லி குழுமத்தின் இணை சேர்மனும் பேராசிரியை டாக்டர் உஷாரவி மற்றும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக்டர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சிறுதானியங்கள் குறித்த மருத்துவ பயன்கள், கருப்பைக்கு பலன் தரும் சிறுதானியங்கள், ஞாபக சக்தி, தோல் பாதுகாப்பு, முடி பாதுகாப்பு, போன்றவற்றி ற்கான சிறுதானியங்கள் குறித்து டாக்டர் ரவி பேசினார்.

    பேராசிரியை டாக்டர் உஷாராணி சிறு, குறு உடல் உபாதைகளுக்கு மிகச்சரியான இயற்கை மருத்துவ முறைகளையும் மருந்து, மாத்திரையின்றி அக்குபிரஷர் மூலமாக தீர்வளிக்கும் அக்குபிரஷர் புள்ளிகளை கற்றுக்கொடுத்தார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு டாக்டர் கல்பலதா சால்வை அணிவித்தார். ஹெர்பல் கேர் நிறுவனத்தின் பேராசிரியர் சக்திவேல் கே.என்.சி. கல்லூரியின் டாக்டர்கள் அமுதவல்லி, ஸ்ரீதேவி, சுமதி, மற்றும் காதாம்பரி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்வின் மூலமாக பயன் பெற்றனர்.

    Next Story
    ×