search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HBD Raghava Lawrence"

    அரசு பள்ளிகளை நடிகர் - நடிகைகள் தத்து எடுக்க வேண்டும் என்று மேல்மலையனூரில் அரசு பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்த நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். #RaghavaLawrence #Oviyaa
    விழுப்பபுரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இருந்தது.

    இதை புதுப்பித்து தரும்படி அந்த கிராமத்தை சேர்ந்த நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்ற செயலாளர் சங்கர் மற்றும் பொதுமக்கள், நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்சிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதன் பேரில் ரூ.5 லட்சம் செலவில் அந்த கட்டிடத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் புதுப்பித்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த கட்டிட வேலைகள் நடந்து முடிந்தது.

    அதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.



    இதில் நடிகை ஓவியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் ஓவியா பேசியதாவது,

    உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவள் தான். அரசு பள்ளிகளில் படிக்க அனைவரும் முன்வரவேண்டும். பெரிய பள்ளியில் படித்தால் தான் பெரிய ஆளாக வரமுடியும் என்பது கிடையாது.

    விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பெரிய ஆளாக வரலாம். அரசு பள்ளியை நடிகர் - நடிகைகள் தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும். இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு அளித்த மாஸ்டர் ராகவா லாரன்சுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #RaghavaLawrence #Oviyaa #SchoolRenovation

    நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், செஞ்சி-பாடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை சீரமைத்து கொடுத்துள்ளார். #HBDRaghavaLawrence
    அமைச்சர் செங்கோட்டையன் ஒரு விழாவில் பேசும் போது, “பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோவில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான்.

    அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்” என்று கூறி இருந்தார்.

    அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ - மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் கோரி இருந்தார்.

    இதனை ஏற்று ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும், செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார்.

    பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்துள்ளார்.



    செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் மாதிரி மாற்றி உள்ளார். ராகவா லாரன்ஸ் பிறந்தநாளான இன்று பள்ளியின் திறப்பு விழா நடக்கிறது.

    லாரன்சின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்கிறார்.

    இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது, “இரண்டு பள்ளிகளோடு நின்று விடப்போவதில்லை... என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

    என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டும் என்றார். #RaghavaLawrence #HBDRaghavaLawrence #SchoolRenovation

    ×