search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harendra Singh"

    இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. #HarendraSingh
    புதுடெல்லி:

    இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த மே மாதம் ஹரேந்திர சிங் பொறுப்பு ஏற்றார். ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் இல்லை. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஆசிய விளையாட்டில் களம் இறங்கிய இந்திய அணி இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றது. ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியுடன் வெளியேறியது.

    இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், கடந்த ஆண்டில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹரேந்திர சிங்கை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஹரேந்திர சிங் ஏற்கனவே இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் ஜூனியர் அணி 2016-ம் ஆண்டு உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதனால் மறுபடியும் அவர் ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்.

    சீனியர் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதையொட்டி, விண்ணப்பங்களை வரவேற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை இந்திய அணியின் மேற்பார்வையாளர்களாக உயர்செயல்பாட்டு இயக்குனர் டேவிட் ஜான் மற்றும் அணியின் பகுப்பாய்வு பயிற்சியாளர் கிறிஸ் சிரியலோ ஆகியோர் இருப்பார்கள் என்று ஆக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலக கோப்பை ஆக்கி போட்டியை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம் என்று இந்திய ஆக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார். #HockeyWorldCup #HarendraSingh
    உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதையொட்டி நேற்று பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிடம், ‘ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய 7 இளம் வீரர்கள் இந்த போட்டியில் இடம் பெற்று இருப்பது குறித்து’ கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    இந்தியாவை இளம் அணி என்று சொல்ல முடியாது. இந்த அணியால் வெற்றி பெற்று வரலாறு படைக்க முடியும். நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். இளம் வீரர்கள் இந்திய சீனியர் அணியின் சீருடையை அணிய போதிய தகுதி படைத்தவர்கள் என்று தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு இருக்கிறார்கள். எனவே வீரர்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அதனை உணர்ந்து இருக்கிறார்கள். வீரர்கள் அடிப்படை ஆட்ட யுக்தியை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். ஆட்டத்தை காண வரும் ரசிகர்களை 12-வது வீரராக கருதி அவர்களின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இந்த ஆண்டில் நடந்த பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியும், உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று யாரும் நினைத்து இருப்பார்களா?. எல்லா அணிகளும் தங்களுக்கென்று தனி யுக்தியை வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாள் எப்படி அமைகிறதோ? அதனை பொறுத்தே முடிவு இருக்கும். லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்து நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்காகும்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் கண்ட தோல்வியை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் அதனை மறந்து விடுங்கள். எல்லா போட்டிகளிலும் முதல் ஆட்டம் முக்கியமானது என்பதை புரிந்து இருக்கிறோம். முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் 40 முதல் 50 சதவீதம் நெருக்கடி விலகும். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று முழு புள்ளியை பெற விரும்புகிறோம். எந்தவொரு அணிக்கு எதிராகவும் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் சமரசம் செய்யமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HockeyWorldCup #HarendraSingh
    ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைப்போம் என்று இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #HarendraSingh #Hockeycoach
    ஜகர்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரில் நாளை முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. வருகிற 20-ந் தேதி நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

    போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆக்கி அணி இதுவரை தொடர்ச்சியாக 2 முறை தங்கப்பதக்கத்தை வென்றதில்லை. தங்கப்பதக்கத்தை மீண்டும் வென்று அந்த சரித்திரத்தை நாங்கள் படைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதேநேரத்தில் அதீத நம்பிக்கை கொள்ளவில்லை. எந்தவொரு எதிரணியையும் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது என்பது எங்களுக்கு தெரியும். இந்த போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.  #HarendraSingh #Hockeycoach
    ×