என் மலர்
நீங்கள் தேடியது "Hanuman Jayanti Festival"
- 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 3 நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஔஷதம் விழாவும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தன்வந்திரி பீடத்தில் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை தன்வந்திரி பீடத்தில் 9 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 ஜாங்கிரிகள், வடைகள், எலுமிச்சம்பழம், வெற்றிலை, வாழைப்பழங்களால் மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த ஹோமம் நடைபெற்றது.
நேற்று மாலை பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்து கொடுத்து, ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
முன்னதாக காலை தன்வந்திரி பீடத்திற்கு வந்த மலேசியா சங்கரமடம், அண்ணாமலையார் தேவஸ்தானத்தை சேர்ந்த ஜகத்குரு சங்கராச்சார்ய சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளுக்கு, பீடத்தின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றிற்கான பூர்வாங்க ஹோம, பூஜைகளை தொடங்கி வைத்து, தன்வந்திரி பீடத்தில் தரிசனம் செய்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். அப்போது ஈரோடு சுந்தரேச சிவாச்சாரியார் உள்பட பலர் உடன் இருந்தனர். மேலும் வருகிற 26ம்தேதி பகல் 12 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
- கோவில்களில் சிறப்பு பூஜை
- ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
வேலூர்:
மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அனுமன் பிறந்த நாளாகும். அமாவாசை தினத்தில் வரும் அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கொணவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அதேபோன்று வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ரங்காபுரம் கோதண்ட ராமர் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஏரியூர் ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
புதுவசூர் ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆஞ்சநேயர் கோவில்களில் சீதாராமருடன் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது வழக்கம்.
- அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது.
தாராபுரம்:
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமையான காடு அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோவில்களில் சீதாராமருடன் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது வழக்கம்.ஆனால் இங்கு மூலமூா்த்தியாக ஆஞ்சநேயரும், உற்சவ மூா்த்திகளாக சீதாராமரும் காட்சி தருவது தனிச்சிறப்பு ஆகும்.இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு புஷ்ப அலங்காரம், 8 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் மட்டுமல்லாது, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.






