search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanged corpse"

    விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக வாலிபர் தொங்கினார்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த செல்வராஜ்.அவரது மகன் அருள் செல்வன் (வயது20), இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    கடந்த 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்து காணாமல் போன இவர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே கீற்று கொட்டகையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிசாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியில் கீற்றுக் கொட்டகை உள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்து கிடந்தார். அப்போது அவழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எதற்காக இங்கு தூக்கு மாட்டி இறந்தார்? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×