என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கீற்று கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
- கடலூர் அருகே கீற்று கொட்டகையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிசாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியில் கீற்றுக் கொட்டகை உள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்து கிடந்தார். அப்போது அவழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எதற்காக இங்கு தூக்கு மாட்டி இறந்தார்? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






