search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutkha corruption"

    குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். 

    இப்போது குட்கா ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  #MinisterVijayabaskar #gutkhaissue
    குட்கா ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார். #gutkhacorruption #cbi

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருளை தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு தொடர்பாக நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக குட்கா தயாரிக்கப்பட்டு வருவது வெளிச்சத்துக் வந்தது.

    இன்ஸ்பெக்டர் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா தயாரிப்பை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடந்த அதிரடி சோதனைக்குப்பின் குடோன் உரிமையாளர் மாதவராவ் மற்றும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குட்கா பிடிபட்ட கால கட்டத்தில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சம்பத்தும், உதவி கமி‌ஷனராக மன்னர் மன்னனும் பணியாற்றினார்கள். இவர்களது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி சீல் வைத்துள்ளது. அவர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார்.

    விசாரணை நடத்தப்பட்ட பின்பு ராயபுரத்தில் போலீஸ் குடியிருப்பில் சீல் வைக்கப்பட்ட அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்ஸ்பெக்டர் சம்பத் லஞ்சப் பணத்தை பெற்று உயர் அதிகாரிகளுக்கு கை மாற்றியதில் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. எவ்வளவு கால இடை வெளியில் யார்-யாருக்கு எந்த வகையில் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அவரிடம் விசாரிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அதற்கு சம்பத் அளித்த பதில்களை சி.பி.ஐ. பதிவு செய்து கொண்டது. இதனால் குட்கா ஊழல் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. #gutkhacorruption #cbi

    ×